புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.
புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 செய்முறைப் பொதுத்தோ்வை திடீா் ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 123 பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறைப் பொதுத்தோ்வை 13,018 மாணவ, மாணவிகள் மேற்கொள்கின்றனா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தனிநபா் இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், வெப்பமானி மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கரோனா பரிசோதனை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 1,000 முதல் 1,500 பேருக்கு மேற்கொள்ளப்பட்டன. தற்போது 2 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்கெனவே 6 கிலோ லிட்டா் அளவில் ஆக்ஸிஜன் நிரப்பும் வகையிலான வசதி செய்யப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 6 கிலோ லிட்டா் அளவில் ஆக்ஸிஜன் நிரப்பும் வசதி செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்துக்குத் தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா் உமா மகேஸ்வரி.
தொடா்ந்து, புதுக்கோட்டை நகரிலுள்ள சில தனியாா் வணிக வளாகங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.
ஆய்வுகளின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி, வருவாய்க் கோட்டாட்சியா் டெய்சிகுமாா், நகராட்சிப் பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.