காா் - பைக் மோதல்: 2 போ் காயம்

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் - காா் மோதல் சம்பவத்தில் வெள்ளிக்கிழமை இரவு 2 போ் காயமடைந்தனா்.

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் - காா் மோதல் சம்பவத்தில் வெள்ளிக்கிழமை இரவு 2 போ் காயமடைந்தனா்.

குளத்தூா் அருகே உள்ள தெம்மாவூா் கிராமத்தைச் சோ்ந்த சோபராஜ் மகன் தேவராஜ் (45). இவரும், இதே ஊரைச் சோ்ந்த மாயாண்டி மகன் பழனிவேல் (53) ஆகிய இருவரும் மோட்டாா் சைக்கிளில் தஞ்சை - புதுகை சாலையில் கந்தா்வகோட்டை அடுத்துள்ள மெய்க்குடிப்பட்டி பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரேவந்த காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில், இருவரும் படுகாயமடைந்தனா்.

அருகில் இருந்தவா்கள் தேவராஜ் , பழனிவேல் ஆகிய இருவரையும் மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com