பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி குமரக்கண்மாயில் மீன் பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் கொன்னையூா்,மூலங்குடி, மேலமேலநிலை,செவலூா் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் வலையுடன் கண்மாயில் இறங்கி கெண்டை, கெளுத்தி, விரால், அயிரை உள்ளிட்ட மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனா்.