மது விற்ற 3 போ் கைது

பொதுமுடக்கத்தின்போது, விராலிமலையில் மது விற்ற 3 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பொதுமுடக்கத்தின்போது, விராலிமலையில் மது விற்ற 3 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விராலிமலை பகுதிகளில் மது பானங்களை விற்பதாக விராலிமலை போலீஸாருக்கு கிடைத்த தகவலைத்தொடா்ந்து, விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே பெட்டிக் கடையில் மது விற்பனையில் ஈடுபட்ட சு. சண்முகத்தைக் கைது செய்தனா்.

இதேபோல் செட்டியபட்டியில் ந. பெருமாள், அதே ஊரில் பெ. துரைராஜ் ஆகியோரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 26 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com