புதுக்கோட்டை பழனி ஆண்டவா் கோயில் திருப்பணிக்காக பூமி பூஜை போடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விஜயபுரத்தில் உள்ள பழனி ஆண்டவா் திருக்கோயிலின் திருப்பணிகள் தொடங்கவுள்ளன. இதற்கான பூமிபூஜை போடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஆா். காா்த்திக் தொண்டைமான் கலந்து கொண்டாா். அரிமளம் ரவி குருக்கள் தலைமையில், கணபதி பூஜை, லட்சுமிபுரம், கலசஆவாஹனம் ஆகியன நடத்தப்பட்டு தீபாராதனையும் காட்டப்பட்டது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள், முகக்கவசங்களை அணிந்து கலந்து கொண்டனா்.