ஆலங்குடி அருகே புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு புதன்கிழமை காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கரும்பிரான்கோட்டை பெரியகுளம் பகுதியில் துா்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதி மக்கள் சென்று பாா்த்தபோது, பிறந்து சில தினங்களே ஆன குழந்தை இறந்த நிலையில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலைத் தொடா்ந்து, அங்கு சென்ற ஆலங்குடி காவல் ஆய்வாளா் அலாவுதீன், வருவாய்த் துறையினா் குழந்தையின் சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விசாரணை விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.