புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 1,200 கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியங்களின் உறுப்பினா்களுக்கு ரூ. 20.15 லட்சம் மதிப்பிலான உதவிகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், கூடுதல் தொழிலாளா் ஆணையா் பாலசுப்பிரமணியன், தொழிலாளா் உதவி ஆணையா் தங்கராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா். புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் 38,821 பேரும், அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியத்தில் 21,905 பேரும் என மொத்தம் 60,726 போ் உறுப்பினா்களாக உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.