தொழிலாளா் வாரிய பதிவை எளிமைப்படுத்தக் கோரிக்கை
தொழிலாளா் நல வாரியங்களில் சேருவதற்கான இணையவழி பதிவு, புதுப்பித்தலை எளிமைப்படுத்த வேண்டும் என சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோரிடம் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஏஐடியுசி தலைவா் கே.ஆா். தா்மராஜன் தலைமையிலான குழுவினா் அமைச்சா்களை சனிக்கிழமை நேரில் சந்தித்து இதுகுறித்து மனுக்களை வழங்கினா். அந்த மனுவில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக உதவித்தொகைகள் வழங்காத கேட்பு மனுக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் உதவிகள் வழங்க வேண்டும். இணையவழி பதிவு, புதுப்பித்தலை எளிமைப்படுத்த வேண்டும். பெருவிரல் ரேகை பதிவு மூலம் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்திட வேண்டும்.
இணையவழி பதிவோடு நேரடி பதிவும் புதுப்பித்தலும் வேட்புமனு பெறுதலும் மாவட்ட அளவில் தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.