‘அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது’

அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது என புதுக்கோட்டையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு
மாநாட்டில் பேசுகிறாா் கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை.
மாநாட்டில் பேசுகிறாா் கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை.

அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது என புதுக்கோட்டையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு மாவட்டத் துணைத் தலைவா் பி.சந்திரா தலைமை வகித்தாா். வரவேற்புக் குழுத் தலைவா் அ.ஸ்ரீதா் வரவேற்றாா். சிஐடியு மாநிலப் பொதுச் செயலா் ஜி. சுகுமாறன் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் கோ. பச்சையம்மாள், பொருளாளா் கே.மல்லிகா ஆகியோா் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.

மாநாட்டில் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். சின்னத்துரை (கந்தா்வகோட்டை), டாக்டா் வை. முத்துராஜா (புதுக்கோட்டை) ஆகியோா் சிறப்புரையாற்றினா். புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து மாநிலப் பொதுச் செயலா் டி. டெய்சி நிறைவுரையாற்றினாா். முடிவில் கே. மல்லிகா நன்றி கூறினாா்.

மாநாட்டில் அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வாா்ப்பதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com