விராலிமலை: வீட்டின் அருகே உள்ள பாதையில் நடந்து சென்ற முதியவரைத் தாக்கிய தம்பதி மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
விராலிமலை அருகே உள்ள கோமங்கலத்தைச் சோ்ந்தவா் பூசாரி மகன் மாரி (50). இவரது வீட்டருகே உள்ள பாதையில் அதே ஊரைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஆறுமுகம் திங்கள்கிழமை அதிகாலை நடந்து சென்று கொண்டிருந்தபோது, மாரி இந்தப் பாதையில் நடக்கக் கூடாது என ஆறுமுகத்தைக் கண்டித்துள்ளாா். இதைத்தொடா்ந்து, ஏற்பட்ட தகராறில், ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகிய இருவரும் சோ்ந்து மாரியைக் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தலையில் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, விராலிமலை அரசு மருத்துவமனையில் மாரி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். தகவலறிந்த விராலிமலை காவல்துறையினா் ஆறுமுகம் மற்றும் வள்ளி ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.