கந்தா்வகோட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியத்தைச் சோ்ந்த அரவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தா்ம ராஜ் மகள் வீரலட்சுமி (23). அதே கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ் என்பவரது வயல் காட்டில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தாா். இதையறிந்த அரவம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் செங்கதிா்ச் செல்வன் கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் விசாரணையில், திருமணத்தில் நாட்டமில்லாத வீரலட்சுமி மனமுடைந்து தீக்குளித்து இறந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.