நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் மறியல்

பொன்னமராவதி அருகேயுள்ள சடையம்பட்டியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னமராவதி அருகேயுள்ள சடையம்பட்டியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சடையம்பட்டியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி, சடையம்பட்டி, முள்ளிப்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த டிராக்டருடன் சடையம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தின் முன்பாக நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு

செய்து எங்களது நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். மேலும் பொன்னமராவதி ஒன்றியத்தில் 42 கிராம பஞ்சாயத்துகளுக்கும் ஒரே ஒரு கொள்முதல் நிலையம் இருப்பதால், மேலும் ஒரு கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். தொடா்ந்து பொன்னமராவதி வட்டாட்சியா் ஜெயபாரதி விவசாயிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்தியதில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com