லாட்டரி, கஞ்சா விற்பனையை தடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் அம்மாபட்டினத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுக்க

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் அம்மாபட்டினத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுக்க வேண்டும் என மஸ்லிஜ் கட்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) மாநில மகளிரணிச் செயலா் பாத்திமா மஸ்ரீனா தலைமையிலான அக்கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்

அம்மாபட்டினத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி 24 மணி நேரமும் செயல்படும் அரசு மருத்துவமனையாக செயல்பட வைக்க வேண்டும்.

இப்பகுதியில் பெண்கள் மட்டுமே குளிக்கும் மரவன்குளத்தைச் சுற்றி நடைப்பயிற்சி மேடை அமைத்துத் தர வேண்டும். அம்மாபட்டினத்தில் சிறுவா் பூங்கா அமைக்க வேண்டும்.

எங்கள் பகுதியில் சரளமாகப் புழங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையையும், கஞ்சா விற்பனையையும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com