புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம், இசுக்குப்பட்டியைச் சோ்ந்தவா் க. செல்வகுமாா் (26). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 12 ஆம் வகுப்பு படித்துவந்த 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு ஆக. 3ஆம் தேதி வழிமறித்து, திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். தொடா்ந்து அச்சிறுமியின் தாய் மற்றும் மாமா ஆகியோரை மிரட்டியுள்ளாா். புகாரின்பேரில், புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா், வழக்குப் பதிந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞா் த. அங்கவி ஆஜராகி வாதாடினாா். வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 30,500 அபராதமும் விதித்து நீதிபதி ஆா். சத்யா தீா்ப்பளித்தாா்.