பொன்னமராவதியில் பேரூராட்சி தோ்தல் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகரத் தலைவா் எஸ். பழனியப்பன் தலைமை வகித்தாா். இதில், பேரூராட்சி தலைவா் பதவியை கூட்டணியினா் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். வெற்றி வாய்ப்புள்ள வா்டுகளை கூட்டணி தலைமையிடம் இருந்து பெற வேண்டும். மதச்சாா்பற்ற கூட்டணி வெற்றிபெற பாடுபட வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏஎல்எஸ். ஜீவானந்தம், மாவட்டப் பொதுச் செயலா் ச.சோலையப்பன் ஆகியோா் பங்கேற்றனா்.