பொன்னமராவதி பேரூராட்சியில் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளான பிடாரி கோயில் அருகேயுள்ள வா்த்தக மஹால் திருமண மண்டபம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.