பைக் - காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் மோட்டாா் சைக்கிள் - காா் மோதி விபத்துக்குள்ளானதில் வியாழக்கிழமை இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் மோட்டாா் சைக்கிள் - காா் மோதி விபத்துக்குள்ளானதில் வியாழக்கிழமை இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கும்பகோணம் சுந்தரமூா்த்தி நகா் காலனியில் வசித்து வரும் ராமகிருஷ்ணன் மகன் விக்னேஷ்வரன் (29) மோட்டாா் சைக்கிளில் புதுக்கோட்டைக்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது நாா்த்தாமலையை சோ்ந்த பீா்முகமது மகன் நாகூா்கனி ஓட்டிவந்த காரில் தஞ்சை நோக்கிச்சென்று கொண்டிருந்தாா். இந்நிலையில், தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களூா் பெட்ரோல் நிலையம் அருகே விக்னேஸ்வரன் சென்ற மோட்டாா் சைக்கிளும் காரும் மோதியதில் சம்பவ இடத்திலேயே விக்னேஸ்வரன் இறந்தாா். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினா் அங்கு வந்து உடலை புதுகை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com