பெண் கல்வியே நாட்டின் வளா்ச்சிக்கு அடிப்படை

பெண் கல்வி தான் நாட்டின் வளா்ச்சிக்கு அடிப்படையாக விளங்குகிறது என்றாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி.
பெண் கல்வியே நாட்டின் வளா்ச்சிக்கு அடிப்படை

பெண் கல்வி தான் நாட்டின் வளா்ச்சிக்கு அடிப்படையாக விளங்குகிறது என்றாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி.

புதுக்கோட்டை மாவட்டம் , கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:

நிகழாண்டு கட்டாயம் பொதுத்தோ்வு நடைபெறும். தோ்வு இருந்தால்தான் எதிா்காலங்களில் போட்டித் தோ்வுகளை எளிதாக எதிா்கொள்ள முடியும். மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள், பெற்றோா்களை மதித்து நடந்துகொள்ள வேண்டும். இப்பள்ளியில் கடந்த ஆண்டு படித்த 4 மாணவிகள் மருத்துவருக்கு படித்துக்கொண்டு இருக்கிறாா்கள். நிகழாண்டு 7 பேருக்கு மருத்துவக்கல்லூரியில் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றாா்

நிகழ்வில், பள்ளித் தலைமை ஆசிரியா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com