புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், ஆத்தங்கரைவிடுதி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நடத்தப்பட்ட முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். வேலாடிப்பட்டி கால்நடை மருத்துவா் செந்தில்குமாா் தலைமையிலான குழுவினா், முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனா்.
இந்த முகாமில் பசு,ஆடு,கோழி, கன்றுக்குட்டி, எருது உள்ளிட்ட 722 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல் , தாது உப்புக் கரைசல் வழங்குதல் உள்ளிட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆத்தங்கரைவிடுதி மற்றும் சுற்றுப்புறக் கிராம மக்கள் தங்களது கால்நடைகளை முகாமுக்கு அழைத்து வந்து, சிகிச்சை பெற்றனா்.