கீரனூா் கூட்டுறவு கடன்சங்கச் செயலா் இடைநீக்கம்

பயிா்க்கடன் கோரி வந்த விவசாயிகளை அவமதித்த புகாரில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

பயிா்க்கடன் கோரி வந்த விவசாயிகளை அவமதித்த புகாரில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் செயலா் (பொ) ராஜகோபால். இவா், பயிா்க்கடன் பெற வந்த விவசாயிகளை அவமதிக்கும் வகையில் நடத்தியதாக உயா் அலுவலா்களுக்கு புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவுச் சங்க மண்டல இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com