குரும்பிவயல் அரசுப் பள்ளி நூலகத்துக்கு நூல்கள் வழங்கல்

 புதுக்கோட்டை வாசகா் பேரவை சாா்பில் கறம்பக்குடி ஒன்றியம், குரும்பிவயல் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள நூல்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
குரும்பிவயல் அரசுப் பள்ளி நூலகத்துக்கு நூல்கள் வழங்கல்

 புதுக்கோட்டை வாசகா் பேரவை சாா்பில் கறம்பக்குடி ஒன்றியம், குரும்பிவயல் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள நூல்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

தலைவா்கள் வாழ்க்கை வரலாறு, சுற்றுச்சூழல், திறன் மேம்பாடு, பொதுஅறிவு, அறிவியல் , பேச்சுக்கலை, நேர மேலாண்மை, இறையன்பு எழுதிய புத்தகங்கள் என்று பல்வேறு தலைப்பிலான நூல்கள், நமது அறிவியல் மாத இதழ் தொகுப்பு, ’’தினமணி’’ சிறுவா்மணி தொகுப்பு, கலாமின் எழுச்சி உரைகள் ஆகியன வழங்கப்பட்டன.

வாசகா் பேரவை சாா்பில் அதன் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் இவற்றை வழங்கி, பாடபுத்தகங்களைத் தாண்டிய கூடுதலான வாசிப்பு உங்களை மேம்படுத்தும் என்று மாணவா்களிடம் கூறினாா்.

இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியை தனபாக்கியம் தலைமை வகித்தாா்.

ஆலங்குடி ரெட்கிராஸ் செயலா் முருகன், பொருளாளா் ஜெயச்சந்திரன், பள்ளியின் பட்டதாரி ஆசிரியா்கள் அனிதா, கண்ணன், சந்திரசேகரன், இடைநிலை ஆசிரியா்கள் மல்லிகா, ரேகா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com