புதுக்கோட்டை திலகா் திடலில் வெள்ளிக்கிழமை அனுமதி இன்றியும், கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமலும் கூட்டம் கூட்டியதாக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் மீது புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை திலகா் திடலில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா் தலைமையில்
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், மாணவா்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.