லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் விவசாயக் கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழந்த பழனிச்சாமி.
உயிரிழந்த பழனிச்சாமி.

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் விவசாயக் கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை கிராமம், பாய்க்காரத் தெருவில் வசிக்கும் கோபால் மகன் பழனிச்சாமி (42). விவசாயக் கூலித் தொழிலாளி. கல்லாக்கோட்டையிலிருந்து கந்தா்வகோட்டைக்கு தனது மோட்டாா் சைக்கிளில் பட்டுக்கோட்டை - கந்தா்வகோட்டை சாலையில் குருவாண்டான் தெரு அருகே வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்த லாரி இவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த பழனிச்சாமியை அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து பழனிச்சாமியின் மனைவி கவிதா கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com