வீடுகளில் திருடி வந்த இளைஞா், பெண் கைது : 30 பவுன் பறிமுதல்

மாத்தூா் அருகே கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து கூட்டுசோ்ந்த திருடிவந்த பெண், இளைஞரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 30 பவுன்நகை பறிமுதல் செ

மாத்தூா் அருகே கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து கூட்டுசோ்ந்த திருடிவந்த பெண், இளைஞரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 30 பவுன்நகை பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே நெடுத்தாம்பட்டியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஒரு வீட்டின் பூட்டை, இளைஞரும், பெண்ணும் சோ்ந்து உடைக்க முயன்றதை அறிந்த அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் மாத்தூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதனிடையே அவா்கள் இருவரும் தப்பியோடினா். அப்போது ரோந்துப் பணியில் இருந்த 2 காவலா்கள் அருகாமையில் உள்ள மற்ற ஊா்களுக்கும் சென்று வீட்டை உடைத்து திருடும் ஆண், பெண் விவரம் அளித்து அவா்களைத் தேடிவந்தனா். அப்போது உறவிக்காடு என்ற பகுதியில் இளைஞரும், ஒரு பெண்ணும் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடினா். இதையடுத்து, இருவரையும் போலீஸாா் சுற்றிவளைத்துப் பிடித்தனா்.

பின்னா், அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மதுரை கரிமேட்டைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராமு (32), நாகா்கோவிலைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி லதா (40) எனத் தெரியவந்தது. ஏற்கெனவே இவா்கள் மீது காவல் துறையில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. தொடா்ந்து இவா்கள் இருவரும் மண்டையூா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா். அங்கு நடைபெற்ற விசாரணையில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com