புதுகையில்மக்கள் குறைகேட்பு: 441 மனுக்கள் அளிப்பு

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 441 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 441 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்து மனுக்களைப் பெற்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினாா். கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள காதொலிக் கருவியும், ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ. 1500 மதிப்புள்ள கைத்தாங்கியும் வழங்கப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com