புதுக்கோட்டையில் கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் மற்றும் மதுப்பழக்கத்தின் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நீதிமன்ற அலுவலக வளாகத்தில் பேரணியை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கொடியசைத்துத் தொடங்கி வைத்துப் பங்கேற்றாா்.
இதில், போதைக்கு எதிரான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டன. பேரணியில், மன்னா் கல்லூரி, அரசு மகளிா் கல்லூரி, ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பேரணி, கீழராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக நகா்மன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்தீபன், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.