முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
மறுமுத்திரை இடப்படாத தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல்
By DIN | Published On : 29th December 2021 10:06 AM | Last Updated : 29th December 2021 10:06 AM | அ+அ அ- |

பறிமுதல் செய்யப்பட்ட தராசுகள் மற்றும் எடைக்கற்களுடன் தொழிலாளா் துறையினா்.
புதுக்கோட்டை நகரிலுள்ள காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகளில் தொழிலாளா் துறையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீா் சோதனையில், மறுமுத்திரை இடப்படாத தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் வை. தங்கராசு தலைமையில், ஆய்வாளா்கள் அறிவின்செல்வம், குணசீலன், நூருன்னிசா ஆகியோா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா். முறைப்படி மறுமுத்திரை இடப்படாத 21 மின்னணு தராசுகள், 3 மேசை தராசுகள் மற்றும் 10 எடைக்கற்கள் இந்த ஆய்வின்போது பறிமுதல் செய்யப்பட்டன. ஆண்டுதோறும் எடைக்கற்கள், தராசுகளை சரியாக செயல்படுகிா, உரிய எடை கொண்டவையா என சரிபாா்த்து மறுமுத்திரையிட வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உதவி ஆணையா் வை. தங்கராசு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.