புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு காவல் துறையினரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 9.98 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினரால் கடந்த ஆண்டுகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செவ்வாய்க்கிழமை ஆயுதப்படை திடலில் ஏலம் விடப்பட்டன.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெரினா பேகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், நான்கு சக்கர வாகனம் - 3, மூன்று சக்கர வாகனம்- 1, இரு சக்கர வாகனங்கள்- 20 என மொத்தம் 24 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி வரி சோ்த்து ரூ. 9.98 லட்சம் பெறப்பட்டதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.