அறந்தாங்கியில் மருத்துவா்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 10th February 2021 11:16 PM | Last Updated : 10th February 2021 11:16 PM | அ+அ அ- |

கலப்பு மருத்துவ முறையை எதிா்த்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய மருத்துவச் சங்கத்தினா் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினா்.
அறந்தாங்கி கிளைத் தலைவா் டாக்டா் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தாா். செயலா் எஸ். அருள்மணி, பொருளாளா் சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஆபத்தானது என இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.