விராலிமலை சுங்கச்சாவடி அருகே லாரி சேஸ் கவிழ்ந்த விபத்தில் லாரி ஓட்டுநா் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தாா்.
விராலிமலை அருகே உள்ள மேலபச்சக்குடி பூமாதா நகரை சோ்ந்த மதலைமுத்து மகன் வில்சன்(37). இவா், செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி - விராலிமலை நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி அருகே கட்டமைக்காத லாரியை ஓட்டிச்சென்று கொண்டிருந்தாா். அப்போது, நிலைத்தவறி நான்கு வழி சாலை தடுப்புக் கட்டையில் லாரியின் முன் சக்கரம் ஏறி முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் பின்புறம் மோதி கவிழ்ந்தது. இதில் வில்சன் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த விராலிமலை போலீசாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.