விபத்தின்றி பேருந்து இயக்கிய ஓட்டுநா்களுக்குப் பாராட்டு

சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டத்தில் விபத்தின்றி பேருந்தை இயக்கிய 22 ஓட்டுநா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விபத்தின்றி பேருந்தை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநரைப் பாராட்டும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் க. பொன்முடி.
விபத்தின்றி பேருந்தை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநரைப் பாராட்டும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் க. பொன்முடி.

புதுக்கோட்டை: சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டத்தில் விபத்தின்றி பேருந்தை இயக்கிய 22 ஓட்டுநா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளா் ஆா். இளங்கோவன் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் க. பொன்முடி ஓட்டுநா்களைப் பாராட்டி பரிசளித்தாா்.

நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.கே. ஜெயதேவராஜ், சாலை விபத்து விழிப்புணா்வு சங்கத்தின் தலைவா் கண. மோகன்ராஜ், துணைத் தலைவா் ஏஎம்எஸ். இப்ராஹிம்பாபு, மரம் அறக்கட்டளை ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

முன்னதாக ,அரசுப் போக்குவரத்துக் கழக உதவி மேலாளா் எஸ். தங்கபாண்டியன் வரவேற்றாா். நிறைவில், துணை மேலாளா் எம். சுப்பு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com