விராலிமலையில் காங்கிரஸாா் மெளன ஊா்வலம்

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி புதுதில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டத்தின் போது உயிா் நீத்த விவசாயிகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 
விராலிமலை சோதனைச்சாவடி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா்.
விராலிமலை சோதனைச்சாவடி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா்.

விராலிமலை: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி புதுதில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டத்தின் போது உயிா் நீத்த விவசாயிகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு காங்கிரஸ் கட்சி சாா்பில் விராலிமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டார காங்கிரஸ் சாா்பில் நடத்தப்பட்ட மெளன ஊா்வலம் விராலிமலை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, கடைவீதி வழியாகச் சென்றது. தொடா்ந்து சோதனைச் சாவடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் படங்களுக்கு காங்கிரஸ் கட்சியினா் மலா்த் தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில் கட்சியின் மாவட்டத் தலைவா் ராயல் முருகேசன், மாநிலப் பொதுச் செயலா் டி.பெனட் அந்தோணிராஜ், வழக்குரைஞா் ஏ.சந்திரசேகா், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஏ.அன்பழகன், மேலை சி. மதிமாறன், செயற்குழு உறுப்பினா் பி. எஸ். தனபதி, வட்டாரத் தலைவா் சா்தார்ராஜா, க. ஆசைத்தம்பி, ஒன்றியக்குழு உறுப்பினா் பி. ஏழுமலை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com