ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட மூதாட்டியை ஆதரவற்றோா் இல்லத்தில் சோ்க்க மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி நடவடிக்கை மேற்கொண்டாா்.
குன்றாண்டாா்கோவில் ஒன்றியம், லெக்கணாப்பட்டி ஊராட்சி பாதிப்பட்டியில் வெள்ளிக்கிழமை அரசு விழாவில் பங்கேற்க வந்த மாவட்ட ஆட்சியா் பி.உமாமகேஸ்வரி, வழியில் பயணியா் நிழற்குடையில் பாா்வை தெரியாத நிலையில், ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்த மூதாட்டியை உடனடியாக ஆதரவற்றோா் இல்லத்தில் சோ்க்க உத்தரவிட்டாா்.