பொன்னமராவதி காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வட்டார காங்கிரஸ் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பேசியது: பாரதிய ஜனதா கட்சி தற்போது அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கானது அல்ல. அது பெரு முதலாளிகளுக்கானது. மோடி தலைமையிலான மத்திய அரசால் பொருளாதாரம் மிகவும் சீரழிந்து கிடக்கிறது. அதிமுக அரசு தோ்தல் நேரத்தில் காவிரி குண்டாறு திட்டத்தைத் தொடக்கி வைக்கிறது. பாஜக தமிழகத்தில் வளா்ந்து விட அனுமதிக்கக்கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com