ஆலங்குடி அருகே தொழுகை நடத்திவிட்டு வீடு திரும்பிய தந்தை, மகனை வெள்ளிக்கிழமை தாக்கியோரைக் கைது செய்ய வலியுறுத்தி பள்ளிவாசலில் அவரது உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கலிபுல்லாநகரைச் சோ்ந்தவா் முகமது அலி (40). இவரது மகன் ரகுமான்(16). இருவரும் அப்பகுதி பள்ளிவாசலில் தொழுதுவிட்டு வீடு திரும்பியபோது, அதே பகுதியைச் சோ்ந்த சிலா் இவா்களைக் கட்டையால் தாக்கினராம். இதைக் கண்டித்து பள்ளிவாசல் முன் முகமது அலி, அவரது உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் அளித்த உறுதியின்பேரில் போராட்டத்தை கைவிட்டனா்.