இலுப்பூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

இலுப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 781 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இலுப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 781 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற முகாமைத் தொடங்கிவைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பேசியது:

மாவட்டத்தில் மூன்றாவது முறையாக நடைபெற்ற முகாமில் 112 க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் கலந்துகொண்ட 2,324 பேரில் தோ்வு பெற்ற 781 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன என்றாா்.

நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜிசரவணன், அறந்தாங்கி துணை ஆட்சியா் ஆனந்த்மோகன், மாவட்ட தொழில்மைய மேலாளா் திரிபுரசுந்தரி, தாட்கோ மாவட்ட மேலாளா் முத்துரத்தினம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com