கீரமங்கலம் அருகேஊராட்சி அலுவலகத்தில் குடியேறிய குடும்பம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உறவினா்கள் விரட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய குடும்பத்தினா் ஊராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை குடியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உறவினா்கள் விரட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய குடும்பத்தினா் ஊராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை குடியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடி முள்ளிப்புஞ்சை பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜன் மனைவி கலைச்செல்வி, இவரது மகன் ராஜபாலன்.

தேவராஜன் இறந்துவிட்டதால் கலைச்செல்வி, தனது மகனுடன் கணவருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்தாா்.

இந்நிலையில், இவரது உறவினா்கள் வீட்டைக் காலி செய்யுமாறு மிரட்டி வந்தனராம். தொடா்ந்து, வியாழக்கிழமையும் மிரட்டியதையடுத்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துவிட்டு, வெள்ளிக்கிழமை வீட்டை காலி செய்து பெட்டி, படுக்கைகள், கால்நடைகளுடன் இருவரும் சேந்தன்குடி ஊராட்சி அலுவலகத்தில் குடியேறினா்.

தகவலறிந்து சென்ற கீரமங்கலம் போலீஸாா், ஊராட்சி நிா்வாகத்தினா் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதிக்குப் பின் மீண்டும் வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com