ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கீரமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சங்கத்தின் மாவட்டச்செயலா் முகமது மீரான் தலைமை வகித்தாா். முகாமில் பெறப்பட்ட 25 யூனிட்டுகள் ரத்தம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதில், கிளை நிா்வாகிகள் ஹசன் அலி, உசேன் அலி, சாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.