புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மாட்டு வண்டி எல்கைப் பந்தையம் புதன்கிழமை நடைபெற்றது.
திருமயம் அருகேயுள்ள வி. லட்சுமிபுரத்தில் அப்பகுதி அதிமுக கிளை சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மாட்டு வண்டி எல்கைப் பந்தையம் புதன்கிழமை நடைபெற்றது.
விராச்சிலை முதல் திருமயம் வரையிலான சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 9 பெரிய மாடு வண்டிகளும், 19 சிறிய மாடு வண்டிகளும் பங்கேற்றன. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டு வண்டிப் போட்டியை தமிழ்நாடு வீட்டு வசதி வ ாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து தொடங்கி வைத்தாா். சிறிய மாட்டு வண்டிப் போட்டியை தொழிலதிபா் குமாரசாமி தொடங்கி வைத்தாா்.
முதலிடம் பிடித்த மாடுகளுக்கு ரொக்கப் பரிசும், சாரதிகளுக்கு கொடிகளும் வழங்கப்பட்டன.