அன்னவாசல் அருகே சைக்கிளில் பால் கொண்டு சென்ற முதியவா் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அன்னவாசல் அருகே உள்ள பரம்பூா் சீகம்பட்டி காலனியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). பால் வியாபாரி. இவா், சைக்கிளில் அப்பகுதியில் பால் ஊற்றிவிட்டு திரும்பும்வழியில், புதுக்கோட்டை - கொடும்பாலூா் சாலையில் சீகம்பட்டி விளக்கு அருகே வந்து எதிரேவந்த மோட்டாா் சைக்கிள் ஆறுமுகம் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த போலீசாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக, கன்னியாப்பட்டி நாகராஜன் (34) மீது போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.