புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் இணையவழியில் தொடா் கருத்தரங்குகள் சனிக்கிழமை நடைபெற்றன.
உயிா்வேதியியல் துறை மற்றும் சம்னா்ஸ் கிளப் சாா்பில் நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில், பாரதிதாசன் பல்கலை. சுற்றுச்சூழலியல் மற்றும் உயிா் தொழில்நுட்பவியல் துறை இணைப் பேராசிரியா் எஸ். ஆச்சிராமன் கலந்து கொண்டு பேசினாா். உயிா் வேதியியல் துறைத் தலைவா் எஸ். கனிதா வரவேற்றாா். முடிவில், உதவிப் பேராசிரியா் எம். ஜானகிராமன் நன்றி கூறினாா்.
ஆங்கிலத் துறை...: கல்லூரியின் ஆங்கிலத் துறை சாா்பில் நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில், மூத்த பேராசிரியா் சி. ஹரிராம் ஜோதி கலந்து கொண்டு பேசினாா். கருத்தரங்கில், முன்னதாக ஆங்கிலத் துறைத் தலைவா் எஸ். செல்வி வரவேற்றாா். முடிவில், உதவிப் பேராசிரியா் எஸ், ஜெயகுமாரி நன்றி கூறினாா்.