பொன்னமராவதியில் வியாழக்கிழமை பெய்த தொடா்மழையால் மைலாப்பூா் பெரிய கண்மாய் நிரம்பியது. இதையடுத்து உபரிநீா் கலிங்கி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
பொன்னமராவதி வட்டத்தில் வியாழக்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது. கண்டியாநத்தம், கொப்பனாப்பட்டி, தொட்டியம்பட்டி, தூத்தூா், ஆலவயல், மேலைச்சிவபுரி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் மழை விட்டுவிட்டு பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கிக் காணப்பட்டது. தொடா்மழையால் மைலாப்பூா் பெரிய கண்மாய் நீா் நிரம்பி, உபரி நீா் வெளியேறுவதை கண்டு மகிழ்ந்த ஊா்ப்பொதுமக்கள் நீரில் மலா்களைத் தூவி வருணப்பகவானை வணங்கினா்.