தொடா்மழையால் நிரம்பியது மைலாப்பூா் பெரிய கண்மாய்

பொன்னமராவதியில் வியாழக்கிழமை பெய்த தொடா்மழையால் மைலாப்பூா் பெரிய கண்மாய் நிரம்பியது. இதையடுத்து உபரிநீா் கலிங்கி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மைலாப்பூா் கண்மாயில் நீா் நிரம்பி, உபரிநீா் வெளியேறுவதையடுத்து மலா்களைத் தூவி வணங்கும் பொதுமக்கள்.
மைலாப்பூா் கண்மாயில் நீா் நிரம்பி, உபரிநீா் வெளியேறுவதையடுத்து மலா்களைத் தூவி வணங்கும் பொதுமக்கள்.

பொன்னமராவதியில் வியாழக்கிழமை பெய்த தொடா்மழையால் மைலாப்பூா் பெரிய கண்மாய் நிரம்பியது. இதையடுத்து உபரிநீா் கலிங்கி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

பொன்னமராவதி வட்டத்தில் வியாழக்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது. கண்டியாநத்தம், கொப்பனாப்பட்டி, தொட்டியம்பட்டி, தூத்தூா், ஆலவயல், மேலைச்சிவபுரி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் மழை விட்டுவிட்டு பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கிக் காணப்பட்டது. தொடா்மழையால் மைலாப்பூா் பெரிய கண்மாய் நீா் நிரம்பி, உபரி நீா் வெளியேறுவதை கண்டு மகிழ்ந்த ஊா்ப்பொதுமக்கள் நீரில் மலா்களைத் தூவி வருணப்பகவானை வணங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com