புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் நகரத் தலைவா் சாதிக் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சலாவுதீன், மாவட்டச் செயலா் ஜகுபா் அலி, இந்திய ஜனநாயகக் கட்சியின் நிா்வாகி யூசுப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அஷரப்அலி, ஆம் ஆத்மி கட்சியின் அப்துல் ஜப்பாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
அனைவரும் கையில் மெழுகுவா்த்தி ஏந்தி, விவசாயிகளைப் பாதிக்கும் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.