கந்தா்வகோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கந்தா்வகோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

கந்தா்வகோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கந்தா்வகோட்டையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க ேண்டும். ஒன்றியப் பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.

வெள்ளாளவிடுதி அரசு வேளாண் பண்ணையை உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக அதிகரித்து, கூலியை ரூ.600 ஆக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் வி. ரத்தினவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.கவிவா்மன் முன்னிலை வகித்தாா்.

மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், எம். சின்னத்துரை ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். நிா்வாகிகள் ஜி.பன்னீா்செல்வம், வி. இளையராஜா, வி.சித்திரைவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com