நாளை வாக்காளா் விழிப்புணா்வு ஓவியப் போட்டி

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி (ஜன. 25) புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவத்துறை சாா்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள்,

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி (ஜன. 25) புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவத்துறை சாா்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள், மருத்துவ மாணவா்கள் ஆகியோருக்கான வாக்காளா் விழிப்புணா்வு சிறப்பு ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) காலை 10 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கரோனா பொது முடக்கக் காலத்தில் களப்பணியாற்றிய மருத்துவத்துறையினரை சிறப்பு செய்யும் வகையில், தலைமைத் தோ்தல் அலுவலா் வழங்கியுள்ள ஆலோசனையின்படி இப்போட்டி நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்பதற்கான சுய உறுதிமொழிப் படிவம் மருத்துவக் கல்லூரி முதல்வா், மருத்துவத்துறை இணை இயக்குநா், துணை இயக்குநா் அலுவலகங்களில் கிடைக்கும்.

ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பான ஓவியம் வரைந்தவா்கள் தோ்வு செய்யப்பட்டு, தலைமைத் தோ்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படுவா். முடிவுகளை அவா் அறிவிப்பாா்.

முதல் பரிசாக ரூ. 20 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 15 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com