திருமயம் ஒன்றியத்தில் 4,950 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
66 ஊராட்சி ஒன்றிய, தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், 17 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 83 பள்ளிகளில் பயிலும் சுமாா் 4950 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கிய மூன்றாம் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நான்காவது பிரிவு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
திருமயம் வட்டாரக் கல்வி அலுவலா் சே.இராமதிலகம் மூலம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், பள்ளிகளுக்கு புதன்கிழமை இவை வழங்கப்பட்டதாக வட்டாரக்கல்வி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.