புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தாஞ்சூா் கிராமத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை திருமயம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை இயக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியின்போது, திருமயம் ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து, முன்னாள் தலைவா் பொன். ராமலிங்கம், சமுத்திரம் ஊராட்சித் தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.