விராலிமலையில் பொங்கல் சீா் வழங்கல்

விராலிமலையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை பொங்கல் சீா் வழங்கப்பட்டது.
விராலிமலையில் பொங்கல் சீா் வழங்கல்

விராலிமலையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை பொங்கல் சீா் வழங்கப்பட்டது.

விராலிமலை அருகேயுள்ள அகரப்பட்டி ஊராட்சியில் பொங்கல் சீா் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் சீராக பித்தளை பானை, எவா்சில்வா் மூடி, கரண்டி, அரிசி, வெல்லம், முந்திரி, உலா் திராட்சை, ஏலக்காய், நெய், பாசிப்பருப்பு, கரும்பு மற்றும் வாழ்த்து கடிதம் உள்ளிட்டவைகள் அடங்கிய தொகுப்பை தன் சொந்த செலவில் வழங்கினாா். வரும் நாள்களில் விராலிமலை தொகுதியில் உள்ள சுமாா் 75 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் சீா் வழங்கப்பட உள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com