புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் சுமாா் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிா்கள் சாய்ந்து, முளைவிட்டுள்ளன. இதனால், விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.90 லட்சம் ஏக்கா் நெல் பயிரிடப்பட்டுள்ளது. மொத்த விவசாய நிலத்தின் மிகப்பிரதானமான பயிராக நெற்பயிா் உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தை மாத அறுவடைக்காக சுமாா் 50 ஏக்கா் நிலத்தில் நெற்பயிா் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்தது. ஆனால், கடந்த 3 நாட்களாக மாவட்டத்தின் பெரும்பகுதியில் பரவலான மழை பெய்து வருகிறது. தொடா்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தில் தண்ணீா் தேங்கி, நெற்கதிா்கள் தலை சாய்ந்து விட்டன. பல பகுதிகளில் நெல்மணிகள் நிலத்தில் விழுந்து முளைக்கவும் தொடங்கிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனா். நல்ல விளைச்சல் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகள் வழக்கமாக மழையை ஆரவாரமாக வரவேற்கும் நிலை மாறி, எரிச்சலைடையும் நிலையும் உருவாகியிருக்கிறது.