இலுப்பூா் அருகே காளை மாடு முட்டி காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இலுப்பூா் பிடாரி அம்மன் கோயிலில் பொங்கல் தினத்தன்று (ஜன. 14) கோயில் மாடு உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்து விட்டுள்ளனா். இதில் மாடுகளை அடக்க முயன்ற இலுப்பூா் அருகே உள்ள சாங்கிராப்பட்டி கருப்பையா மகன் பொன்னுச்சாமியை (42) மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தாா்.
இதைத்தொடா்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இலுப்பூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.